Home இந்தியா கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மோடிக்கு எதிராக போட்டி :

கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மோடிக்கு எதிராக போட்டி :

by admin


கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடபோவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் கோரிக்கைக்காக 140 நாட்கள் டெல்லி சென்று போராடிய போது , மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 5 முறை சந்தித்து உரிய உதவி செய்வதாக தெரிவித்த போதும் இன்று வரை உதவி செய்யவில்லை.

வருகிற பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில், லாபகரமான விலையை விவசாயிகளின் விளை பொருட்களுக்கும், கடன் தள்ளுபடியும், ஓய்வூதியம் தனிநபர் காப்புறுதி அளிப்பதாக உறுதியளிக்க வேண்டும்

இல்லையென்றால், மோடி ஒரு தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக தமிழகத்தில் இருந்து விவசாயிகள் 111 பேர், 2 தொகுதியில் போட்டியிட்டால் 222 பேர், 3 தொகுதியில் போட்டியிட்டால் 333 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதம் விவசாயி அலைந்து திரிந்து சோறு இல்லாமல் போய், சுயேச்சை வேட்பாளர் இறந்தால் அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது அவருக்கு தெரியும். தமிழகத்தை பொறுத்தவரை, எங்களது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளை எதிர்த்து வேலை செய்வோம் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More