Home இலங்கை கிளிநொச்சியில் றோல் போல் விளையாட்டுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை

கிளிநொச்சியில் றோல் போல் விளையாட்டுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்டம் கடந்த சில வருடங்களாக றோல் போல் விளையாட்டில் சாதித்து வருகிறது. கடந்த 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து உலக கிண்ண றோல் போல் போட்டிக்கும், ஆசிய கிண்ண றோல் போட்டிக்கும் யுவதிகள் சென்று சாதித்தும் வந்துள்ளனர்.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் றோல் போல் விளையாடுவதற்கும்ஈ பயிற்சி பெறுவதற்குமாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு உலக கிண்ண றோல் போட்டி பங்களாதேஸில் இடம்பெற்ற போது இலங்கை தேசிய றோல் போல் அணியில் இடம்பிடித்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவிகள் மற்றும் கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெல்கமில் இடம்பெற்ற ஆசிய றோல் போட்டியில் இலங்கை தேசிய அணியில் விளையாடிய கிளிநொச்சி யுவதிகள் தங்களுக்கான பயிற்சியினை நெல் உலரவிடும் தளத்திலும், பொது நோக்கு மண்டபத்திற்கும் பெற்றே போட்டியில் பங்குபற்றி சாதித்துள்ளனர்.

எனவே கிளிநொச்சி மாவட்டம் தற்போது றோல்போட்டியில் பிரகாசித்து வரும் நிலையில் மாவட்டத்தில் றோல்போட்டிக்கான எவ்வித வசதிகளும் இதுவரை இல்லை. றோல் போட்டிக்கான மைதானம் இல்லை, பயிற்றுவிப்பாளர் இல்லை, வீர வீராங்கனைகளுக்கான உபகரணங்களை பெற்றுக்கொள்வதில் சிரமம் என பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.

எனவேதான் றோல் போட்டியில் தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச போட்டியில் பங்குபற்றும் அளவில் திறமைகளை கொண்டுள்ள இளைஞர் யுவதிகள் உள்ள மாவட்த்தில் இவ்விளையாட்டுக்குரிய அடிப்படை வசதிகளையும், பயிற்றுவிப்பாளரையும் அரசு நியமிக்க வேண்டும் என மாவட்டத்தின் விளையாட்டு சமூகம் கோரியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More