Home இலங்கை மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை சீரமைத்து சேவையினை ஆரம்பிக்க அரச அதிகாரிகள் தடை

மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை சீரமைத்து சேவையினை ஆரம்பிக்க அரச அதிகாரிகள் தடை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை சீரமைத்து சேவையினை மீள ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகள் தடையாக உள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட காசநோய் தடுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் சி. யமுனானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள காசநோய் தடுப்பு அலகில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையானது கடந்த வருடம் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை சீரமைத்து மீள ஆரம்பிப்பதற்கான எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அரச அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

அந்தக் காணியினை வேறொரு தேவைக்கு பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை காசநோய் வைத்தியசாலையாக மீளப் பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் விரும்பவில்லை.

எனினும் இந்த காச நோய் வைத்தியசாலை ஆரம்பிப்பதன் மூலமே வடக்கில் காச நோயை கட்டுப்படுத்த முடியும் – காச நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் சுமார் 303 பேர் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த வருடம் சுமார் 66 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் காசநோயால் பாதிக்கப்பட்ட 303 பேரில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்றும் மாவட்ட காசநோய் தடுப்பு அதிகாரி மருத்துவர் சி.ஜமுனானந்தா தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More