Home உலகம் நெதர்லாந்து துப்பாக்கி பிரயோகம் – சந்தேகநபர் கைது

நெதர்லாந்து துப்பாக்கி பிரயோகம் – சந்தேகநபர் கைது

by admin


நெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரில் டிராமில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்திருந்தனர்

  டிராம் தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து 3கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் சந்தேகநபரான 37 வயதுடைய துருக்கிப் பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு பின்னர் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வீதித் தடுப்பு சோதனைகளையும் மேற்கொண்டிருந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள வீட்டில் வைத்து குறித்த சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்

துப்பாக்கி பிரயோகத்திற்கு பயங்கரவாத நோக்கம் காரணமாகயிருக்கலாம் என அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்த போதிலும்; குடும்பதகராறே இதற்கு காரணம் எனவும் நெதர்லாந்து காவல்துறையினருக்கு அந்த நபரை முன்னரே தெரியும் எனவும் அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் குறிபிட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் செச்னியாவில் மோதலில் ஈடுபட்டவர் எனவும் அவர் ஜஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலையானவர் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More