Home இலங்கை சிவனொளி பாதமலையின் பெயர் பலகை சேதமாக்கப்பட்டது பிரதேசத்தில் பதற்றம்…..

சிவனொளி பாதமலையின் பெயர் பலகை சேதமாக்கப்பட்டது பிரதேசத்தில் பதற்றம்…..

by admin

 

அண்மையில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தமிழில் பெயர் மாற்றப்பட்ட சிவனொளி பாதமலையின் பெயர் பலகையின் தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்கள் நேற்றிரவு சில விசமிகளால் தார் ஊற்றி அழிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவனொளிபாதமலை என தமிழில் பெயரிடப்பட்டிருந்த குறித்த பெயர் பலகை அண்மையில் சிங்கள மொழியில் பெயர் மாற்றப்பட்டதனையடுத்து அங்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மீண்டும் தமிழில் பெயர் மாற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு புதிதாக தமிழில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் எழுதியிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை சில விசமிகள் தார் ஊற்றி அழித்துள்ளனர்.  இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை   ஏற்பட்டுள்ளதனையடுத்து மஸ்கெலியா காவல்நிலைய நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More