Home இலங்கை கொத்தணிக் குண்டுகள் தடுப்பு சாசனத்தினை இலங்கையின் சட்டத்துக்குள் உள்ளடக்க அமைச்சரவை அங்கீகாரம்

கொத்தணிக் குண்டுகள் தடுப்பு சாசனத்தினை இலங்கையின் சட்டத்துக்குள் உள்ளடக்க அமைச்சரவை அங்கீகாரம்

by admin


கொத்தணிக் குண்டுகள் தடுப்புத் தொடர்பான சாசனமான ஒஸ்லோ உடன்படிக்கையை இலங்கையின் சட்டத்துக்குள் உள்ளடக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையானது மனிதாபிமான ஆயுதக் களைவுகள் மேற்கொள்வதனை வரவேற்க முன்னிற்கும் அரசு என்னும் அடிப்படையில், சர்வதேசத்தில் பொறுப்பான பெயரைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒஸ்லோ உடன்படிக்கையை, இலங்கைச் சட்டத்துக்குள் உள்ளடக்கிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான யோசனை, பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இதற்கான அங்கிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More