Home இலங்கை தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் வழங்கியதை கோர முடியாது :

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் வழங்கியதை கோர முடியாது :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

2009 முதல் தாங்கள் பயன்படுத்திய ஊடக இல்ல கட்டடத்தையும் காணியையும் மீளவும் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி ஊடக அமையும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆளுநரின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கோரிவிடுத்த போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடக இல்லத்தின் காணியையும் கட்டடத்தையும் இராணுவம் இதுவரை விடுவிக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டறியுமாறும் அதாவது நோய்க்கான காரணத்தை கண்டறிந்தால்தான் நோயை தீர்க்க முடியும் எனவே இராணுவத்திடம் சென்று ஏன் விடுவிக்கவில்லை என்று கேட்டறியுமாறும் தெரிவித்த ஆளுநர், காணிக்கான ஆவணங்கள் எங்கு இருக்கிறது என்றும் கோரினார்

இதற்கு பதிலளித்த ஊடக அமையத்தின் நிர்வாகம் இறுதி யுத்தம் காரணமாக பொது மக்கள் தங்களது உயிர்களை பாதுகாக்க முடியாது சூழல் காணப்பட்டது. பெரும்பாலான பொது மக்கள் தங்களின் சொந்த ஆவணங்களை கூட இழந்திருந்தனர். எனவே நாமும் குறித்த காணிக்கான ஆவணத்தையும் இழந்திருந்தோம். அத்தோடு அன்றைய சூழலில் விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் குறித்த கட்டடம் ஊடக இல்லமாக கிளிநொச்சி ஊடகவியலார்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதனை சுட்டிக்காட்டிய போதே ஆளுநர் தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை மீளவும் கோர முடியாது என பதிலளித்தார்.

குறித்த விடயம் தொடர்பாகன ஆளநரிடம் கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க. திருலோகமூர்த்தி, செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்துகொண்டு தங்களது கோரிக்யை எழுத்து மூலம் முனை் வைத்திருதனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More