Home இலங்கை ஜெனிவாத் தீர்மானத்தை நிராகரித்தால் இலங்கையின் மாற்றுத் திட்டம் என்ன? ஐ.நா

ஜெனிவாத் தீர்மானத்தை நிராகரித்தால் இலங்கையின் மாற்றுத் திட்டம் என்ன? ஐ.நா

by admin

இலங்கை அரசாங்கம் ஜெனிவாத் தீர்மானத்தின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக முன்வைக்கவுள்ள மாற்றுப் பொறிமுறைகள் என்ன? என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சட்ட சமத்துவ மற்றும் பாரபட்சத்துக்கு எதிரான பிரிவின் தலைவர் மோனா ரிஷ்மாவி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு, இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறைக்கு அமைய சில விடயங்களுக்குத் தடை நிலவுவதாகவும் எனவே 30ஃ1 பிரேரணையின் பரிந்துரையில் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆனால், இதனை இலங்கை மறுக்குமாக இருந்தால் அதற்கு மாற்றுத் திட்டம் என்ன என்பதைக் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதிகளின் தேசியம் குறித்து அவதானம் செலுத்துவது முக்கியமில்லை எனவும் பொறுப்புக்கூறல் விடயத்தை எவ்வாறு தடைநீக்கி முன்னெடுக்க முடியும் என்பது குறித்த அவதானமே முக்கியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More