இலங்கை பிரதான செய்திகள்

நெடுந்­தீ­விற்கு நிரந்­தர மருத்­து­வர் நியமனம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

Portrait an unknown male doctor holding a stethoscope behind

யாழ்ப்­பா­ணம், நெடுந்­தீ­வில் சேவை­யாற்­று­வ­தற்கு நிரந்­தர மருத்­து­வர் ஒரு­வர் தற்­போது நிய­மிக்கப்பட்­டுள்­ளார் என்று யாழ்ப்­பா­ணம் பிராந்­திய சுகா­தார சேவை­கள் நிலை­யம் தெரி­வித்­துள்ளது.

இது தொடர்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது-:

ஆண்­டு­தோ­றும் குறைந்த மருத்­து­வர்­களே வடக்­குக்கு நிய­மிக்­க ப்­ப­டு­கின்­ற­னர். அவர்­கள் விண்­ணப்­பித்த மாவட்­டத்­துக்கு ஏற்ப மருத்­து­வர்­கள் நிய­ம­னம் செய்­யப்­ப­டு­வர். நிரந்­தர மருத்­து­வர்­கள் இல்­லாத நிலை­யில் சில மருத்­து­வ­ம­னை­கள் இயங்­கு­கின்ற­ன.

அந்தவகையில் நெடுந்­தீ­வில் சேவை­யாற்­று­வ­தற்கு மருத்­து­வர்­கள் முன்­வ­ராத நிலை­யில் அங்கு நிரந்­தர மருத்­து­வரை நிய­மிக்க முடி­யா­தி­ருந்­த நிலையில் தற்­போது அங்கு ஒரு நிரந்­தர மருத்­து­வர் நிய­மிக்கப்பட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப ட்­டது.

நெடுந்­தீ­வில் நிரந்த மருத்­து­வர் நிய­மிக்­கப்­ப­டாது இருந்­த­போது, ஓய்வு பெற்ற மருத்­து­வர் ஒரு­வர் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் சேவை­யாற்­று­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்டி­ருந்­தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.