Home இலங்கை “அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வர மாட்டேன்”

“அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வர மாட்டேன்”

by admin


இலங்கை மின்சார சபை மற்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு கிடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையிலும், அமைச்சரவைக் கூட்டங்களில் தான் பங்கேற்கப் போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்யைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மின்சார சபைக்கு எதிராக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளமை தொடர்பில், கருத்துரைத்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்று மற்றுமொரு அரச நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளால் அந்த நிறுவனம் சரிவடையும்,  அதேபோல  நுகர்வோர் பெரும் துன்பங்களுக்கு உள்ளாவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. அப்படியாயின் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.

இதனிடையே, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More