Home இந்தியா ஆந்திர அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம், 100 கோடி ரூபா அபராதம் விதித்து..

ஆந்திர அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம், 100 கோடி ரூபா அபராதம் விதித்து..

by admin

கிருஷ்ணா நதியில் மணல் கொள்ளை இடம்பெற்றமை தொடர்பாக ஆந்திர அரசுக்கு 100 கோடி ரூபா அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டின் அருகே கிருஷ்ணா நதியில் தினமும் மணல் கொள்ளை நடந்து வந்ததனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சுமத்தியிருந்துடன் இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு முறைப்பாடும் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம், அதிகாரிகள் குழுவை அனுப்பி கிருஷ்ணா நதியில் சோதனை மேற்கொண்டபோது மணல் கொள்ளை நடந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆந்திர அரசுக்கு 100 கோடி ரூபா அபராதம் விதித்ததுடன், கிருஷ்ணா நதியில் மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்ய வேண்டும் எனவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராத தொகையை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கில் சேர்த்து மாசு கட்டுப்பாட்டுக்காக மட்டுமே செலவிட வேண்டும் எனவும் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை ஜூலை 23-ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More