Home இலங்கை இந்திய பாதுகாப்பு செயலர் இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றார்

இந்திய பாதுகாப்பு செயலர் இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றார்

by admin


இரு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்ததையின் போது இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இருநாடுகளுக்கும் இடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் பாதுகாப்பு விவாதத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய குழுவினர் நேற்றையதினம் இலங்கைக்கு வருகைதந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More