Home உலகம் அக்கரபத்தனை காவல்நிலைய களஞ்சியசாலையிலிருந்து 2 கைத்துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளன

அக்கரபத்தனை காவல்நிலைய களஞ்சியசாலையிலிருந்து 2 கைத்துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளன

by admin


நுவரெலியா காவல்துறை வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை காவல்நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைத்துப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை அத்தியட்சகர் ஐ.வூ.டீ. சுகத்தபால தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கி களஞ்சியசாலையானது அங்கு பணிபுரியும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு இருந்த 2 கைத்துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாகவும், கடந்த 23 ஆம் திகதி அக்கரபத்தனை காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியிடம் அறிவிக்கபட்டதாகவும் குறித்த நிலையத்தின் களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பக்கிகளை காவல்துறை உத்தியோகத்தர் மீது தனிபட்ட விரோதத்தில் இருக்கும் யாராவது எடுத்து மறைத்து வைத்திருக்கலாம் என காவல்நிலைய பொறுப்பதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

காணாமல் போன கைத்துப்பாக்கி தொடர்பில் காவல்துறை அத்தியட்சரின் தலைமையில் விசாரனைகளை இடம்பெற்று வருவதோடு, எம்.34 என்ற வகையினை கொண்ட கைத்துப்பாக்கிகளே இவ்வாறு காணாமால் போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
(க.கிஷாந்தன்)

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More