ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற உயிா்த்த ஞாயிறு குண்டுத்த் தாக்குதல்களுக்குப் காரணமானவா்களை பொறுப்புக்கூற வைப்பதற்காக, ஒரு சுயாதீனமான வழக்குத் தொடரும் அலுவலகத்தை நிறுவுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளாா்
தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய கர்தினால், தனிப்பட்ட கொலைப் படைகள், வெள்ளை வான்கள் மற்றும் சட்டவிரோத தடுப்பு மையங்கள் இல்லாத ஒரு புதிய சமூகத்தை உருவாக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளாா்.
“உயிா்ாத் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு அரசியல் கலாச்சாரமும் பங்களித்துள்ளது” எனவும் கர்தினால் கூறியுள்ளாா்.