Home இலங்கை நீண்ட காலத்தின் பின் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

நீண்ட காலத்தின் பின் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நீண்ட காலத்தின் பின் இன்று(11) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை ஒன்பது முப்பது மணிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த வருடம் யூலை மாதம் 24 இறுதியாக கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது. அதன் பின்னர் இன்று இடம்பெற்றுள்ளது. இன்றையக் கூட்டத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி, காணி போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன. பல தீர்மானங்களும் முற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கியமாக வீட்டுத்திட்டம் கிடைப்பெற்றுள்ள நிலையில் அற்கான மணல் பெற்றுக்கொள்வதில் பயனாளிகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் எனவே பிரதேச செயலாளர்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கு தேவையான அளவு மணலை பெற்று வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு வழங்குவது என்ற தீர்மானமும்.

செஞ்சோலை காணியினை தற்போது அங்கு குடியேறியுள்ள செஞ்சோலை பிள்ளைகளுக்கே பகிர்ந்தளிக்க வேண்டும் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள் தேவைகள் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இன்றைய  இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More