Home பிரதான செய்திகள் ராஜஸ்தானை சென்னை வென்றுள்ளது

ராஜஸ்தானை சென்னை வென்றுள்ளது

by admin


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 25 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை சென்னை அணி வென்றுள்ளது. நேற்றிரவு ஜெய்பூர் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 152 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இறுதியில் 6 பந்துகளுக்கு 18 ஓட்டங்கள் வேண்டும் என்ற நிலை காணப்பட்டநிலையில் இறுதி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா 6 ஓட்டங்களை எடுத்தார்.

எனினும் அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் தோனி ஆட்டமிழந்து வெளியேற தொடர்ந்து மிட்செல் சாண்ட்னர் இறுதிப் பந்தில் 6 ஓட்டங்களை எ:த்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More