Home உலகம் எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு 350 அகதிகள் மெக்சிகோவிற்குள் நுழைவு

எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு 350 அகதிகள் மெக்சிகோவிற்குள் நுழைவு

by admin

குவாத்தமாலாவில் இருந்து திரண்டு வந்த அகதிகளில், சுமார் 350 பேர் வன்முறையினை மேற்கொண்டுள்ளதுடன் எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், குவாத்தமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகளாக ஊடுருவி வருகின்றனர்.

இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ இதனை தடுத்து நிறுத்தா விட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் ஏற்பாடு செய்து வருகின்றார். அத்துடன் எல்லையில் 5,800 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குவாத்தமாலாவிலிருந்து நேற்று அதிகாலை சுமார் 2500 அகதிகள் மெக்சிகோவிற்கு வந்த நிலையில் அவர்கள் ;மெக்சிகோ எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் எல்லைக் கதவும் மூடப்பட்டது.  இதனால் ஆத்திரமடைந்த சிலர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனரர் எனவும் அவர்களை காவல்துறையினர் தடுத்ததனால் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மெக்சிகோவிற்குள் நுழைந்த சுமார் 350 பேரை காவல்துறையினர் தடுத்ததால் அவர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டதுடன் காவல் நிலையம் ஒன்றினை தாக்கியதனையடுத்து எல்லையில் கூடுதல் காவல்துறையினர் றிறுத்தப்பட்டு அகதிகள் கட்டுப்படுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டு;ளளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More