Home இலங்கை பூநகரி விபத்தில் சிக்கிய, கனடா பிரஜை பலியானார்..

பூநகரி விபத்தில் சிக்கிய, கனடா பிரஜை பலியானார்..

by admin

பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கனடா வாசி சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். கனடா பிரஜாவுரிமை பெற்ற, 66 வயதுடைய  செல்லப்பா சுந்தரேஸ்வரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த மாதம் மனைவி பிள்ளைகளுடன் குடும்பமாக தாயகம் திரும்பி வேலணையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அந்நிலையில் கடந்த 28ஆம் திகதி விசுவமடுவில் உள்ள தனது காணியை பார்க்கவென மோட்டார் சைக்கிளில் விசுவமடு சென்று  திரும்பும் வழியில் பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானார்

குறித்த விபத்தில் படுகாயமடைந்தவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு பூநகரி வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More