Home உலகம் பிரான்ஸில் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பெரும் தீ விபத்து

பிரான்ஸில் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பெரும் தீ விபத்து

by admin


பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள மிக புகழ்பெற்ற தேவாலயத்தில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
பாரம்பரிய சின்னமாக திகழும் சுமார் 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கிய பகுதி தீ விபத்தில் இருந்து தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அNதுவேளை தேவாலயத்தில் உள்ள அதிகளவான புராதனமான கலைப்பொருட்களை காப்பாற்றுவதற்காக சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும் ஊசி கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானமைக்கான காரணம் எதுவும் இன்னமும் தெளிவாக தெரியவில்லை .  சுமார் 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More