Home உலகம் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மறுத்த மாணவி எரித்துக் கொலை

தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மறுத்த மாணவி எரித்துக் கொலை

by admin


பங்களாதேசில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டினை மீளப்பெற மாணவி மறுத்த மாணவி ஒருவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பெனி என்னும் இந்த நகரை சேர்ந்த 19 வயதான நஸ்ரத் ஜகான் ரபி என்ற மாணவியே இவ்வாறு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

தனியார் பாடசாலையொன்றில் கல்விகற்று வந்த நஸ்ரத் ஜகான் ரபி கடந்த மாத இறுதியில் தலைமை ஆசிரியர் தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறான எண்ணத்தில் தொட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமை ஆசிரியரை கைது செய்த போதும் அந்த பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சிலரும் உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நஸ்ரத் பொய்யாக முறைப்பாடு செய்ததாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் மீது முறைப்பாடு செய்து 11 நாட்களுக்கு பின்னர் பரீட்சை தேர்வு எழுதுவதற்காக நஸ்ரத் ஜகான் பாடசாலைக்கு சென்ற போது அவரது தோழி ஒருவர் அவரை பாடசாலையின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு பர்தா அணிந்திருந்த 5 பேர் தலைமை ஆசிரியர் மீதான முறைப்பாட்டினை மீளப்பெறுமாறு மிரட்டியுள்ளனர்.

அதனை அவர் ஏற்க மறுத்ததால் அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்த நிலையில் இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More