Home இலங்கையாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…

யாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…

by admin

https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2337582273145927/

யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது. யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் மணத்தறை லேன் – சிவன் அம்மன் கோயிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்களில் தீப்பற்றி எரிந்தன.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படைக்கு வழங்கப்பட்ட தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வாகனம் தென்னை மரங்களில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More