Home பிரதான செய்திகள்பஞ்சாப்பை டெல்லி 5 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது

பஞ்சாப்பை டெல்லி 5 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது

by admin


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 37 ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நேற்றிரவு டெல்லியில் இடம்பெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதல்லி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.4. ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.போட்டியின் ஆட்டநாயகனாக டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More