Home இலங்கை தற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது ?

தற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது ?

by admin

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The MailOnline ஊடகம் வெளியிட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலையில் குறித்த வெடி பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.  இந்தத் தொழிற்சாலை கண்டி பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என காவற்துறையினர்  கண்டுபிடித்துள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு முன்னர் தான் வர்த்தக நடவடிக்கைக்காக சம்பியாவுக்கு செல்வதாக தனது மனைவியிடம் குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அவரது மனைவி தனது கணவரை  கடந்த வெள்ளிக்கிழமை விமான நிலையத்திற்கு சென்று  வழி அனுப்பி வைத்துள்ளார். அன்று மாலை 6.50 மணியளவில் பயணிக்கவிருந்த விமானத்திற்கு செல்லவிருந்தவர் தனது மனைவியிடம் வித்தியாசமான முறையில் விடை பெற்றுள்ளார்.

தாக்குதலின் பின்னர் காவற்துறையினர் குறித்த நபருக்கு சொந்தமான கொழும்பு வெல்லம்பிட்டியவில் அமைந்துள்ள தொழிற்சாலையை பரிசோதனைக்கு உட்படுத்தி, அங்கிருந்த முகாமையாளர், மேற்பார்வையாளர், தொழிநுட்பவியளாலர் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.

கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக அவர்கள் Triacetone Triperoxide எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் “சாத்தானின் தாய்” என அழைக்கப்படும் வெடி பொருட்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017 ஆம் ஆண்டு மன்செஸ்டர் மற்றும் 2015 ஆம் ஆண்டு பாரிஸின் படக்லேன் பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு triacetone triperoxide எனப்படும் வெடி பொருளே பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்கொலை குண்டு தாக்குலுக்கான வெடி பொருட்கள் தயாரிக்கப்பட்டது வெல்லம்பிட்டியவில்?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More