Home இலங்கை 24 மணித்தியாலங்களில் 20 சந்தேகநபர்கள் கைது….

24 மணித்தியாலங்களில் 20 சந்தேகநபர்கள் கைது….

by admin

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை, மாவனெல்லை மற்றும் கொம்பனித் தெரு ஆகிய காவல்துறைப் பிரிவுகளில் தலா மூன்று பேரும் மிரிஹான மற்றும் தெஹிவளையில் தலா இரண்டு பேரும் கொள்ளுப்பிட்டி, பண்டாரவளை, காத்தான்குடி, அளுத்கம, புரவசன்குளம் ஆகிய பிரதேசங்களில் தலா ஒவ்வொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேடுதல்களும் சுற்றிவளைப்புக்களும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  #explosions #Sainthamaruthu #Kalmunai  #eastersundayattacklk #suspect#arrested

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More