Home இலங்கை இலங்கையில் இராணுவ சீருடையுடன் 2 ஆம் கட்ட தாக்குதலை நடத்தலாம்

இலங்கையில் இராணுவ சீருடையுடன் 2 ஆம் கட்ட தாக்குதலை நடத்தலாம்

by admin


உயிர்த்த ஞயிறு தினத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இலங்கையில் விரைவில் தமது 2 ஆம் கட்ட தாக்குதலை நடத்தலாம் என பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வான் ஒன்றினை பயன்படுத்தி, இராணுவ சீருடையை ஒத்த சீருடையில் மறைந்திருந்து இந்த தாக்குதலை அவர்கள் நடத்தலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் ஊடாக அமைச்சர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பௌத்த விகாரைகளில் பெண் தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தும் திட்டம் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வுப்பிரிவினர் அது தொடர்பிலும் இரகசிய விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #armyuniform #isis #attack #eastersundaylk #srilanka

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More