Home இலங்கை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான க்ரூ டிராகன் விண்கலம், வெடித்து சிதறியது..

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான க்ரூ டிராகன் விண்கலம், வெடித்து சிதறியது..

by admin

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான க்ரூ டிராகன் விண்கலம், வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக, தனது முதல் விண்கலமான க்ரூ டிராகனை அறிமுகம் செய்திருந்தது.  எலோன் மஸ்க் தலைமையிலான இந்த நிறுவனம், நாசாவுடன் இணைந்து இதற்கான பணிகளை நீண்ட காலமாக மேற்கொண்டது.

க்ரூ டிராகன் விண்கலத்தில் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்ததால், அதில் பயணிக்கும் விஞ்ஞானிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதுடன் இந்த விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் சென்று வர திட்டமிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ஆளில்லா க்ரூ டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இந்த விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் அதன் இயந்திரம் சோதனை செய்யப்பட்ட போது விண்கலம் வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியான போதும் நாசாவோ, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமோ இதனை உறுதிப்படுத்தாத நிலையில் தற்போது அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரும் நாசாவுக்கான பட்ஜெட் குழுத் தலைவருமான ரிச்சர்ட் ஷெல்பி இதனை உறுதி செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More