Home இலங்கை மிருசுவிலில் குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் பலி -இருவர் காயம்

மிருசுவிலில் குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் பலி -இருவர் காயம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.மிருசுவில் பகுதியில் குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்.மிருசுவில் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அப்பாப்பிள்ளை சுப்பிரமணியம் (வயது 68) என்பவரே உயிரிழந்தவராவர். அவரது மனைவி சு. மகாலட்சுமி (வயது 63) மனைவியின் சகோதரியான கா.கோணேஸ்வரி (வயது 60) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் வீட்டு வேலியில் இராட்சத குளவி கூடு காணப்பட்டதாகவும் அவை காற்று வீசியமையால் களைந்து வீட்டில் இருந்தவர்களை கொட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவரும் அவல குரல் எழுப்பிய போது அயலவர்கள் காவோலைகள் , தென்னோலைகளில் தீ மூட்டி சென்று குளவி கொட்டுக்கு இலக்கானவர்களை அங்கிருந்து மீட்டு கொடிகாமம் வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மூவரும் மேலதிக சிகிச்சைக்க யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

#mirusuvil #bee #dead

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More