Home இந்தியா பீகார் காப்பகத்தில் 11 சிறுமிகளை கொன்று புதைத்தமை கண்டுபிடிப்பு

பீகார் காப்பகத்தில் 11 சிறுமிகளை கொன்று புதைத்தமை கண்டுபிடிப்பு

by admin

பீகாரின் முசாபர்பூர் காப்பகத்தில் 11 சிறுமிகள் பிரஜேஷ் தாகூர் மற்றும் அவர்கள துநண்பர்களினால் கொன்று புதைக்கப்பட்டதாகவும், சிறுமிகளின் எலும்புக்குவியல் தோண்டி எடுக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்றில் சிபிஐ தெரிவித்துள்ளது.

பீகாரின் முசாபர்பூரில் இயங்கி வந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காப்பக நிர்வாகி பிரஜேஷ் தாகூர் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதற்கமைய வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், முசாபர்பூர் காப்பகத்தில் தங்கி இருந்த 11 சிறுமிகள் பிரஜேஷ் தாகூர் மற்றும் நண்பர்களால்  கொன்று புதைக்கப்பட்டதாகவும், சிறுமிகளின் எலும்புக்குவியல் தோண்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

#bihar # children  #sexualharassment #killing

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More