Home இலங்கை கிளிநொச்சியில் மாணவர்களின் வரவு ஐம்பது வீதம்

கிளிநொச்சியில் மாணவர்களின் வரவு ஐம்பது வீதம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இரண்டாம் தவணைக்காக இன்று(06) பாடசாலைகள் கடும் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளை தவிர ஏனைய 64 பாடசாலைகளும் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் பாடசாலைகளின் நுழைவாயிலில் அனுமதிக்கப்பட்ட பெற்றோர், பொலீஸ், சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து கடும் சோதனைகளுக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.

இதன் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புத்தக பைகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. அத்தோடு பாடசாலைகள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டது. இச்சோதனை நடவடிக்கைகளின் போது மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

மாணவர்களின் வரவு ஐம்பது வீதமாக காணப்பட்டுள்ளது என்றும் வழமையான மனநிலையில் மாணவர்கள் சமூகம் அளித்துள்ளனர் என்றும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

 

#kilinochchi #schools #reopen #eastersundaylk #students #checking

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More