Home இலங்கை ‘வாப்பாவின் பெயரைச் சொன்னால் காது, வாயை வாப்பா வெட்டுவார்’ சஹ்ரானின் மகள் தெரிவிப்பு..

‘வாப்பாவின் பெயரைச் சொன்னால் காது, வாயை வாப்பா வெட்டுவார்’ சஹ்ரானின் மகள் தெரிவிப்பு..

by admin


“வாப்பாவின் பெயரை கூறமாட்டேன். வாப்பாவின் பெயரை சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என, சஹ்ரானின் நான்கு வயதான மகள் கூறியுள்ளார் என, அம்பாறை காவற்துறை மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, ஷங்கரில்லா விடுதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவரான, மொஹமட் சஹ்ரான் என்பவரின் நான்கு வயது மகளான மொஹமட் சஹ்ரான் ருசேசினாவிடம், பாதுகாப்பு தரப்பினர் சில விடயங்களை கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அம்பாறை சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்த சஹ்ரானின் மனைவி மற்றும் மகள், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு, கடந்த 8 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டனர். அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைள் தொடர்பில் சஹ்ரானின் மனையான அப்துல் காதர் பாதிமா சாதியா என்பவர், மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்த இவ்விருவரும் சஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தையென, சஹ்ரானின் சகோதரியும் சகோதருமே பாதுகாப்பு தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. #eastersundayattackslk #shahranhashim

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More