Home இலங்கை நல்லூர் முருகனுக்கு, பலத்த பாதுகாப்பு..

நல்லூர் முருகனுக்கு, பலத்த பாதுகாப்பு..

by admin

நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நல்லூர் ஆலய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இராணுவத்தினர்,  விசேட அதிரடி படையினர், காவற்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழலுக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

எனது கணவரும் , வேறு சிலரும் இணைந்து நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக வடமாகாண ஆளூநருக்கு அநாமதய கடிதம் ஒன்று அனுப்பட்டதை அடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #nallurtemplesecurity

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More