Home இலங்கைஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – ஒருமாத நினைவு கூரல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – ஒருமாத நினைவு கூரல்…

by admin

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் நிகழ்வு மிருசுவில் புனித நீக்ளஸ் ஆலயத்தில் இடம்பெற்ற போது வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கோரி இருந்தார். அந்நிலையில் இன்றைய தினம் சமய வழிபாட்டு தலங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. #Eastersundayattacklk #Surenragavan #உயிர்த்தஞாயிறு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More