Home இலங்கை மோடிக்கு ஜனாதிபதி – பிரதமர் – எதிர்கட்சித் தலைவர் வாழ்த்து :

மோடிக்கு ஜனாதிபதி – பிரதமர் – எதிர்கட்சித் தலைவர் வாழ்த்து :

by admin


இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு  ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோரும் மோடிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி  இடம்பெற்று வருகின்றது. இதில் பா.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் தேர்தலில் தற்போது முன்னிலையில் உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.   இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான சுமூக உறவை மேலும் தொடர விரும்புவதாகவும்  குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமா் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர்  வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். பிரதமா் ரணில் விக்ரமசிங்க புதிதாக அமையவுள்ள பா.ஜ.க. அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தொிவிப்பதாக டுவிட்டாில் பதிவிட்டுள்ளாா்.

இதே போன்று எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச இந்நிய  மக்களவை தேர்தலில்  அமோக வெற்றிப் பெற்று  இரண்டாவது  முறையாகவும்   பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளமை  மகிழ்விற்குரியது.    தொடரும் ஆட்சியில்   வெற்றிகளே  கிடைக்க வேண்டும் என  எதிர்க்கட்சி  தலைவர்  மகிந்த ராஜபக்ச  ஷ  இந்நிய  பிரதமர் நரேந்திர மோடிக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை  தொடர்ந்து தனது அயல்  நாடான  இந்தியாவுடன்   இணக்கமாகவே செயற்படும்.   ஒன்றாக இணைந்து செயல்படுகின்ற வலுவான இருதரப்பு உறவுகளில்   இரு  நாடுகளும்   என்றும்  இணைந்திருக்கும்  உருவாக்கும் என்று நாங்கள் நம்புவதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார்.

 #mahintha #ranil #நரேந்திர மோடி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More