Home இலங்கை யாழ்.மாவட்டத்தில் 25ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் வீடுகள் இல்லை

யாழ்.மாவட்டத்தில் 25ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் வீடுகள் இல்லை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.மாவட்டத்தில் 25ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் இதுவரை வீடுகள் இல்லாத நிலைமையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் ,

யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அவர்களுக்கு தற்போது 10 இலட்ச ரூபாய் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 4ஆயிரத்து 693 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களிற்குள் அதி கூடிய தேவை உடைய தொகை இதுவாகும். அதேவேளை நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 113 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. இது குறைந்தளவு தொகையாகும்.

நிதி மூலங்கள் கிடைக்கும் பட்சத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கும் பணிகளை முன்னெடுக்க முடியும்.

யாழ்.மாவட்டத்தில் வீடுகள் , காணிகள் இல்லாமல் அதிகளவானோர் வாழ்கின்றனர். அதில் காணிகள் இருந்தும் வீடுகள் இல்லாதோர் தொகை அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்

#யாழ்.மாவட்டத்தில்   #காணிகள் #வீடுகள்  #jaffna #home

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More