Home இலங்கை யாழ் போதனா வைத்தியசாலை விபத்து -அவசர சிகிச்சைப் பிரிவு சனிக்கிழமை முதல் புதிய கட்டடத் தொகுதியில் :

யாழ் போதனா வைத்தியசாலை விபத்து -அவசர சிகிச்சைப் பிரிவு சனிக்கிழமை முதல் புதிய கட்டடத் தொகுதியில் :

by admin


கடந்த சில மாதங்களுக்கு முன்னர்   பிரதமர் ரணில் விக்கரமசிங்காவினால் திறந்து வைக்கப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு 25.05.2019 சனிக்கிழமை முதல் பொதுமக்களுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்க உள்ளது.

எனவே விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக வருபவர்கள் 25.05.2019 சனிக்கிழமை முதல் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் தொகுதிக்குரிய புதிய நுழைவாயிலூடாக வருமாறு யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி அனுப்பி வைத்துள்ள ஊடக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநோயாளர் பிரிவுக் கட்டத்தில் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவே (EMERGENCY UNIT) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு தளங்களைக் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு 25 ஆந் திகதி முதல் மாற்றப்பட உள்ளது. எனினும் வெளிநோயாளர் பிரிவு மாத்திரம் தொடர்ந்தும் பழைய வெளிநோயாளர் பிரிவுக் கட்டத்தில் இயங்கும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

#யாழ் போதனா வைத்தியசாலை   #விபத்து  #அவசர சிகிச்சைப் பிரிவு  #பிரதமர் #சத்தியமூர்த்தி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More