Home இந்தியா வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் முறைப்பாடுகள் தெரிவிக்கும் வாக்காளர்களை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் முறைப்பாடுகள் தெரிவிக்கும் வாக்காளர்களை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை

by admin


வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் முறைப்பாடுகள் தெரிவிக்கும் வாக்காளர்களை தண்டிக்கும் சர்ச்சைக்குரிய விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தேர்தலின்போது, தங்களது வாக்கு தவறாக பதிவாகி விட்டதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்; அல்லது ஒப்புகை சீட்டு இயந்திரங்கள்; மீது வாக்காளர்களில் சிலர் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவ்வாறு முறைப்பாடு தெரிவிக்கும் வாக்காளர் பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டால், இந்திய தண்டனை சட்டம் 177-வது பிரிவின்படி அவர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் எனும் தண்டனை விதிமுறை அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விதிமுறைக்கு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், சர்ச்சைக்குரிய இந்த விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா நேற்றையதினம் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் முடிந்து விட்டதால், அந்த விதிமுறையை மாற்றி அமைப்பதா? தளர்த்துவதா? என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#வாக்குப்பதிவு இயந்திரம்  #பொய் முறைப்பாடுகள் #மறுபரிசீலனை #சுனில் அரோரா

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More