Home இந்தியா எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 11 ஆயிரம் கிலோ குப்பை அகற்றம்

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 11 ஆயிரம் கிலோ குப்பை அகற்றம்

by admin


எவரெஸ்ட் சிகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணி நிறைவடைந்துள்ள நிலையில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு, கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் திகதி ஆரம்பித்திருந்தது.

இப்பணியில் நேபாள ராணுவத்துடன், நேபாள மலையேற்ற சங்கம், சுற்றுலாத்துறை, எவரெஸ்ட் மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் சில தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 மாத காலமாக நடந்த இந்த தூய்மைப் பணி தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் மற்றும் 4 மனித உடல்கள் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளான நேற்று மட்டும் 5 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன எனவும் இந்த குப்பைகள் அனைத்தும் ராணுவ ஹெலிகொப்டர்கள் மூலம் காத்மாண்டு நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்தக் குப்பைகளில் ஒரு பகுதி, மறு சுழற்சிக்காக தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#எவரெஸ்ட் சிகரம் #குப்பை #அகற்றம் #தூய்மைப்பணி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More