Home இலங்கை காரைநகர் கடற்பகுதியில் காணாமல் போன மீனவர்கள் குறித்து தகவல் இல்லை

காரைநகர் கடற்பகுதியில் காணாமல் போன மீனவர்கள் குறித்து தகவல் இல்லை

by admin


யாழ்.காரைநகர் கடற்பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் காணாமல் போய் ஒருவார காலம் கடந்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்காமையால் உறவினர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. காரைநகர் மத்தியை சேர்ந்த 23 வயதான கோடீஸ்வரன் குகபிரியன் 26 வயதான தவராசா சத்தியராஜ் ஆகிய இருவரும் கடந்த 2ஆம் திகதி காரைநகரில் இருந்து தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.

அது தொடர்பில் கடந்த 4ஆம் திகதி உறவினர்களால் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டை அடுத்து அது தொடர்பில் காவல்துறையினர் கடற்படையினருக்கு அறிவித்தனர்.அதனை தொடர்ந்து கடற்படையினர் மற்றும் சக மீனவர்கள் கடலில் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஒரு வார காலமாகியும் குறித்த மீனவர்கள் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் கிடைக்க பெறாமையால் உறவினர்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.

 #காரைநகர்  #காணாமல் போன #மீனவர்கள் #தகவல் இல்லை

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More