Home இலங்கை வடமாகாண பிரதி காவல்துறைமா அதிபர் மன்னார் நிலவரம் குறித்து ஆராய்வு :

வடமாகாண பிரதி காவல்துறைமா அதிபர் மன்னார் நிலவரம் குறித்து ஆராய்வு :

by admin

புதிதாக பதிவியேற்றுள்ள வடமாகாண பிரதி காவல்துறைமா மா அதிபர் ரவி விஜய குணவர்த்தன இன்றைய தினம் திங்கட்கிழமை(10) மதியம் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு மன்னாரிற்கு சென்றுள்ளார். மன்னாரிற்கு சென்ற தந்த வடமாகாண பிரதி காவல்துறைமா மா அதிபர் மன்னார் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம் பெற்ற அணி வகுப்பு நிகழ்விலும் கலந்து கொண்டார்.

மன்னார் மாவட்ட காவல்துறைமா அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் குறித்த அணிவகுப்பு மரியாதை இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலக்ததில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்து உரையாடியுள்ளதோடு, மன்னாரில் உள்ள ஒவ்வெறு காவல்துறை பிரிவுகளின் நிலைமைகளை கேட்டு அறிந்து கொண்டார்.

-வடமாகாண பிரதி காவல்துறைமா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன நியமிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்திற்கான முதல் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#வடமாகாண  #பிரதி காவல்துறைமா அதிபர் #மன்னார்  #ஆராய்வு #ரவி விஜயகுணவர்த்தன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More