Home இலங்கை ராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்!

ராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்!

by admin


ராஜபக்சக்களை பழிவாங்கும் நோக்கில்  தூரநோக்கமற்ற விதத்தில்  நல்லாட்சி அரசாங்கம்  உருவாக்கிய அரசியலமைப்பின்  19வது திருத்தம்  இன்று பல பிரச்சினைகளுக்கு மூல காரணியாக அமைந்துள்ளதாக  எதிர்க்கட்சி தலைவர்  மகிந்த ராஜபக்ச  தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தலை  நடத்தாமல் இருப்பது  பாரிய  ஜனநாயக உரிமை மீறளாகும்  இடம்பெறவுள்ள அனைத்து தேர்லையும் எதிர்க் கொள்ள தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்காலை கால்டன் இல்லத்தில்   இன்று  இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இடைப்பட்ட பதவி  காலத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களை பாதிக்கும்  வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் அரசாங்கததின்  தான்தோன்றித்தனமான செயற்பாட்டின் காரணமாக  ஜனாதிபதி  தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி   அமைச்சரவையினை   கூட்டவில்லை என்றும்  இதற்கு   19வது அரசியலமைப்பின் ஊடாகவே வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராஜபக்சக்களை  பழிவாங்கும் நோக்கத்தில்  தூரமற்ற  அரசியல்  செயற்பாடுகள் மற்றும் ஏற்படும் எதிர்விளைவுகள் தொடர்பில் ஆராயாமல் அரசியலமைப்பின் 19வது திருத்தம்  கொண்டு வரப்பட்டதாகவும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல  பிரச்சினைகளுக்கு இத்திருத்தமே  பிரதான காரணம். நிறைவேற்று துறைக்கும்,   சட்டவாக்க துறைக்கும் இன்று   அதிகாரம் தொடர்பிலும்   முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தேர்தலின் ஊடாகவே  ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்த மகிந்த ராஜபக்ச,  இடம் பெற்று முடிந்த   உள்ளுராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டுள்ள  மாகாண சபை தேர்தலே  இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  #மகிந்தராஜபக்ச #19வதுதிருத்தம் #அரசியலமைப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More