Home உலகம் மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு; மூச்சு திணறல் -400 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு; மூச்சு திணறல் -400 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

by admin

மலேசியாவில் பசிர் குடங் நகரில் உள்ள 15 பாடசாலைகளில் நச்சுக்காற்றை சுவாசித்த சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதனால் 400 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பசிர் குடங் நகர் தொழில்துறை நகரமாக விளங்குவதனால் அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற அதேவேளை அங்குள்ள கிம்கிம் என்ற ஆற்றில் இரசாயன கழிவுகள் கொட்டப்படுவதனால் அதிலிருந்து வெளியேறும் நச்சுவாயுவினை சுவாசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், பசிர் குடங் நகரில் உள்ள 15 பாடசாலைகளில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதுடன் அவர்கள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்ததையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நச்சுக்காற்றை சுவாசித்ததே மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டதனையடுத்து பசிர் குடங் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பாடசாலைகளை ஒரு வார காலத்துக்கு மூடுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நச்சுக்காற்றை சுவாசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 100-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  #மலேசியா #நச்சுக்காற்றை #மாணவர்களுக்கு#மூச்சு திணறல்  #பாடசாலைகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More