Home இலங்கை கணவனின் கத்திக்குத்துக்கிலக்காகி 3 பிள்ளைகளின் தாயார் மரணம்

கணவனின் கத்திக்குத்துக்கிலக்காகி 3 பிள்ளைகளின் தாயார் மரணம்

by admin

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகரில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் கழுத்து, நெஞ்சு என 12 இடங்களில் கத்திக்குத்து ஆழமாக பதிந்திருந்ததால் அவருக்கு அதிகளவு குருதி வெளியேறியதனால் அவர் உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.  இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தாயார் என்று தெரிவிக்கப்பட்டது. #கணவனின்  #கத்திக்குத்து #தாயார்  #மரணம்

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.