Home இலங்கை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு…

by admin

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.

முன்னதாக, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்குக்கு அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா. சம்பந்தன் தலைமையில் தந்தை செல்வாவின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மாநாடு இடம்பெற்ற வீரசிங்கம் மண்டபம் வரை பேராளர்கள் ஊர்வலம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். #இலங்கைத்தமிழ்அரசுக்கட்சி #தேசியமாநாடு #தந்தைசெல்வா #வீரசிங்கம்மண்டபம்

  

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More