Home இலங்கை துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?

துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?

by admin

Reuters

துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாட்டை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த படகு நேற்று முன்தினம் இரவு துனிசியா கடற்பகுதியில் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

அதிக எடையால் படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இதனை கவனித்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு 4 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்ட நிலையில் இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என ஐநா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More