Home இந்தியா கல்வி உதவித்தொகை நிறுத்தியதை எதிர்த்து, வழக்குத் தாக்கல்…

கல்வி உதவித்தொகை நிறுத்தியதை எதிர்த்து, வழக்குத் தாக்கல்…

by admin

தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தியதை எதிர்த்து வழக்கு தொடர்பாக் மத்திய-மாநில அரசுகள் 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் ஆணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தென்காசியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பையா, சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

எனினும் 2018-19-ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், தனியார் சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இந்த திட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதமானதும் ஆகும்.

எனவே இந்த உத்தரவுகளை ரத்துசெய்து தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மத்திய-மாநில அரசுகள் 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு ஆணைஅனுப்ப உத்தரவிட்டுள்ளனர். #உயர்நீதிமன்றம்  #சென்னை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More