Home உலகம் முகப்புத்தகத்தினை விட்டு மக்கள் நிரந்தரமாக வெளியேற வேண்டும்…

முகப்புத்தகத்தினை விட்டு மக்கள் நிரந்தரமாக வெளியேற வேண்டும்…

by admin

முகப்புத்தகத்தினை விட்டு மக்கள் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என அப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டில் முகப்புத்தக நிறுவனத்திலிருந்து பயனாளிகளின் தகவல்கள் கசிந்ததாகப் பெரிய சர்ச்சை எழுந்ததனையடுத்து முகப்புத்தக நிறுவனத்தின் தகவல் தனியுரிமை கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மேலும், மக்கள் தங்களது முகப்புத்தக கணக்குகளை அழித்துவிட வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வந்தனர். இந்தக் குரல்களுக்கு ஆதரவாக இருந்த முக்கியமானவர்களில் ஒருவரான அப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக். ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல் அவர் தனது முகப்புத்தகத கணக்கையும் நீக்கியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஓராண்டு கழித்து, எனைய பயனாளிகளும் தங்களது கணக்குகளை நீக்க வேண்டுமென்று ஸ்டீவ் வோஸ்னியாக் அறிவுறுத்தியுள்ளார்.  அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் விமான நிலையத்தில் ஸ்டீவ் வோஸ்னியாக் செய்தியாளர்களிடம் பேசிய போதே இதனைத் தெரிவித்துள்ளர்h. முகப்புத்தகம் உட்பட அதன் கீழ் இயங்கும் வட்ஸ் அப், இன்ஸ்டகிராம் ஆகிய தளங்கள் மக்களின் தகவல் தனியுரிமையை மீறுகின்றனவா என கேள்வியெழுப்பப்பட்டதற்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முகப்புத்தகம் உள்ளிட்ட நிறுவனங்கள் தனது தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்பது வருத்தமளிக்கிறது எனவும’ அவர் குறிப்பிட்டுள்ளர்h. முகப்புத்தகத்தினை விட்டு மக்கள் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என அப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டில் முகப்புத்தக நிறுவனத்திலிருந்து பயனாளிகளின் தகவல்கள் கசிந்ததாகப் பெரிய சர்ச்சை எழுந்ததனையடுத்து முகப்புத்தக நிறுவனத்தின் தகவல் தனியுரிமை கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  மேலும், மக்கள் தங்களது முகப்புத்தக கணக்குகளை அழித்துவிட வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வந்தனர். இந்தக் குரல்களுக்கு ஆதரவாக இருந்த முக்கியமானவர்களில் ஒருவரான அப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக். ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல் அவர் தனது முகப்புத்தகத கணக்கையும் நீக்கியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஓராண்டு கழித்து, எனைய பயனாளிகளும் தங்களது கணக்குகளை நீக்க வேண்டுமென்று ஸ்டீவ் வோஸ்னியாக் அறிவுறுத்தியுள்ளார்.  அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் விமான நிலையத்தில் ஸ்டீவ் வோஸ்னியாக் செய்தியாளர்களிடம் பேசிய போதே இதனைத் தெரிவித்துள்ளர். முகப்புத்தகம் உட்பட அதன் கீழ் இயங்கும் வட்ஸ் அப், இன்ஸ்டகிராம் ஆகிய தளங்கள் மக்களின் தகவல் தனியுரிமையை மீறுகின்றனவா என கேள்வியெழுப்பப்பட்டதற்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முகப்புத்தகம் உள்ளிட்ட நிறுவனங்கள் தனது தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்பது வருத்தமளிக்கிறது எனவும’ அவர் குறிப்பிட்டுள்ளர்h.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More