Home இந்தியா இந்தியா மீது இடைவிடாத தாக்குதல்களை நடத்த வேண்டும் – அல் கய்தா 

இந்தியா மீது இடைவிடாத தாக்குதல்களை நடத்த வேண்டும் – அல் கய்தா 

by admin

காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்கள் இந்திய ராணுவம் மீதும் இந்திய அரசு மீதும் இடைவிடாத தாக்குதல்களை நடத்த வேண்டுமென அல் கய்தா அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவகிரி தமது அடைப்பின் பத்திரிகையில் எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இடைவிடாது தாக்குதல்களை மேற்கொள்ளவதனாலேயே இந்தியப் பொருளாதாரத்துக்குச் சேதம் விளைவித்து இந்தியாவுக்கு மனிதவளத்திலும், ராணுவ உபகரணங்களிலும் வெகுவான இழப்பை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் ராணுவமும் அரசும் அமெரிக்காவின் ஆட்களாகச் செயல்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ள அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஸ்யாவை வெளியேற்றிய பின்னர் அரபு முஜாகிதீன்களை காஷ்மீருக்குள் நுழையவிடாமல் பாகிஸ்தான் தடுத்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக முஜாகிதீன்களை பாகிஸ்தான் ராணுவமும் அரசும் பயன்படுத்திவிட்டு அவர்களைப் பின்னர் அழித்து விடுகின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் என்பது அமெரிக்கா நிர்வகிக்கும் எல்லையில் நடைபெறும் மதச்சார்பற்ற போட்டி மட்டுமே என அவர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காஷ்மீர் விவகாரம் ஒட்டுமொத்த உலகிலும் வாழும் இஸ்லாமிய சமூக ஜிஹாதின் ஓர் அங்கமாகும் எனவும் ஜிஹாதை ஆதரிப்பது அனைத்து இஸ்லாமியர்களின் தனிப்பட்ட கடமை என்பதை அறிஞர்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் குறிபிபட்டுள்ள அவர் மசூதிகள், சந்தைகள் என இஸ்லாமியர்கள் கூடும் இடங்களில் தமது ஆட்கள் தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். #இந்தியா  ,தாக்குதல்களை #அல் கய்தா   #முஜாகிதீன்கள் #காஷ்மீர் # இஸ்லாமியர்கள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More