Home இந்தியா மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்ததில் 55 பேர் புதைந்துள்ளனர் – 11 பேரின் உடல்கள் மீட்பு

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்ததில் 55 பேர் புதைந்துள்ளனர் – 11 பேரின் உடல்கள் மீட்பு

by admin

மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 55 பேர் உயிரோடு புதைந்துள்ள நிலையில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள டோங்கிரி பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இந்த 4 மாடி குடியிருப்புக் கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்தநிலையில், நேற்றுக் காலை திடீரென அந்த கட்டிடம் சரிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இதன்போது அங்கிருந்த குடியிருப்புவாசிகள் 55 பேரும் உயிருடன் புதைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த மீட்பு பணியின் போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த 11 பேரின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டதுடன் மேலும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டுள்ளது.

மும்பையில் அண்மையில் பெய்த தொடர் கன மழையின் காரணமாக கட்டிடம் உறுதி தன்மையை இழந்து இருந்து உள்ளதன் காரணமாகவே அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது தெரியவந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.   #குடியிருப்பு கட்டிடம் #புதைந்துள்ளனர் #உடல்கள் #மீட்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More