Home இலங்கை ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…

ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…

by admin


அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல், ஒன்பது நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு செல்லவுள்ளார்.

அடுத்தவருடம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது அமர்வில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அவர், ஜூலை 18ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு, வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், நீதித்துறையினர், ஊடகத்துறையினர், சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆணைக்குழுனர் உள்ளிட்டவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More