மானிப்பாய் பிரதேசத்தில் காவற்துறையினருடன் முரண்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு மானிப்பாய் இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆவா வாள்வெட்டுக் குழுவை காவற்துறையினர் வழிமறித்த போது அங்கு முரண்பாடு ஏற்பட்டு காவற்துறையினர் மீது தாக்கதல் நடத்த முற்பட்டதாக கூறப்பட்டது. இதன்போது காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறி ஆவா குழு உறுப்பினர் ஒருவர் காவற்துறையினனரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருந்த நிலையில் மூன்று பேர் காவற்துறையினனரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது…
325
Spread the love
previous post

